செப்.20ம் தேதி 10 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலம் முழுவதும் தற்போதுள்ள கொரோனா பரவல் சூழலில் ஆய்வு செய்த அரசு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைத்து வகையான பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
அசாம் மாநிலத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வரும் 20 ஆம் தேதி முதல் இந்த மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்படும் பள்ளி வளாகங்களில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Accenture நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான அரிய வாய்ப்பு!
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவுப்படி, ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் பள்ளிகளை திறக்கும் முடிவு, இன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அம்மாநிலம் முழுவதும் கொரோனா நேர்மறை விகிதம் 0.50 முதல் 1% வரை பதிவு செய்யப்பட்டு வருவதால் பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் கமெண்ட்ஸ்!
அந்த வகையில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம், விதை பண்ணைகளை வளர்ப்பது, பண்டிகை கால விடுமுறை மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அரசு வெளியிட்டுள்ள முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி வரும் 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.