நவ.14 குழந்தைகள் தினவிழா – இன்றைய நாளின் உறுதி மொழி.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
இந்தியா முழுவதும் இன்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களும்,ஆசிரியர்களும் இந்த நாளில் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தின விழா:
இந்தியாவில் இன்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133- வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் குழந்தைகளின் மீது அதீத அன்பு கொண்டவர் அதனால் இவரது பிறந்த நாளான நவ.14 ஆண்டுத்தோறும் குழந்தைகள் தின விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தினத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறியும் பல வித கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை குழந்தைகளுக்கு தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் சூப்பர் ஏற்பாடு.. சான்றிதழை சமர்ப்பிக்க இப்படியும் ஒரு வாய்ப்பா?
Exams Daily Mobile App Download
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் நலனுக்காக எப்போதும் உடன் நிற்ப்போம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி நட்புணர்வை வளர்ப்போம் என்று மாணவர்கள் இந்த நாளில் உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தைகளுக்கென்று தனி உரிமைகள் உண்டு. அதனை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.