ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் சூப்பர் ஏற்பாடு.. சான்றிதழை சமர்ப்பிக்க இப்படியும் ஒரு வாய்ப்பா?
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கான பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் வகையிலும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்றிதழ்:
அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் தங்களின் இருப்பை உறுதி செய்யும் விதமாக நவம்பர் மாதத்திற்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா காலத்திற்கு முன்னதாக இந்த சான்றிதழை நேரடியாக மட்டுமே சமர்ப்பிக்க வழி இருந்தது. ஆனால் கொரோனா கால ஊரடங்கு மற்றும் நோய் தொற்று பாதிப்பால் பலர் வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலையில், இருந்த போது டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – 60,000 காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், SBI வங்கி ஒவ்வொரு பகுதியிலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் குறித்து ஓய்வூதியதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று மதுரை பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India) நிர்வாக அலுவலகம், மாதுரம் வளாகம், டாக்டர் அம்பேத்கர் சாலை, மதுரை – 625002 என்ற முகவரியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் போது ஆதார் கார்டு எண், மொபைல் எண், PPO எண், வங்கி அல்லது அஞ்சலக கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.