தமிழகத்தில் 2 ஆயிரத்து 215 அரசு காலிப்பணியிடங்கள்
கொரோனா தடுப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரத்து 215 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அடிப்படையில் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக 42 சுகாதார மாவட்டங்களில் 2 ஆயிரத்து 215 ஆண் சுகாதார ஆய்வாளர்களை அனைத்து துணை பொது சுகாதார இயக்குனர்கள் உடனடியாக பணி அமர்த்த வேண்டும் என்ற ஆணை வெளியாகி உள்ளது.
மாத ஊதியம்:
சுகாதார ஆய்வாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
உடனடியாக பணியமர்த்த பட வேண்டிய மாவட்டங்கள்
இந்த 42 சுகாதார மாவட்டங்களில், பூந்தமல்லிக்கு 20 பேரும், காஞ்சீபுரத்துக்கு 48 பேரும், திருவள்ளூரில் 80 பேரும், செங்கல்பட்டில் 73 பேரும் உடனடியாக பணி அமர்த்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Good