தமிழகத்தில் மதுபான கடைகள் திறப்பு மறு ஆய்வு – அரசுக்கு வலியுறுத்தல்!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதனை அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதுபான கடைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரனமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டு பல நாட்களாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் மதுபான கடைகள் காலை முதல் மாலை வரை கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கலாம் என அரசு தெரிவித்தது.
ஆன்லைன் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி? முழு விவரங்கள்!!
தமிழகத்தில் 2.3 கோடி வீடுகளில் 1.32 கோடி வீடுகளில் மது குடிப்பவர்கள் இருப்பதாக கனடா நாட்டு சமூக ஆர்வலர்கள் அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆண்கள் 58 சதவிகிதம் பேர் மது குடிப்பவர்களாக உள்ளனர். அதில் 33 சதவீதம் பேர் குழந்தைகளையும், 64 சதவீதம் பேர் மனைவியை அடித்து துன்புறுத்துகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் பல குடும்பங்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். மேலும் அதிகமாக குடித்து பல குடும்ப தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கின் போது மதுபான கடைகள் திறக்காததால் பலர் பாராட்டு தெரிவித்தனர். கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.2000 தொகையை கொண்டு பலர் குடிக்கின்றனர். எனவே தமிழக அரசு மதுபான கடைகள் திறப்பு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.