தமிழகத்தில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் ஊடக துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக ஊடகவியல் சான்றிதழ் படிப்பு கற்று தரப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஊடகவியல் சான்றிதழ் படிப்பில் இணைய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் சென்னையில் அமைந்துள்ள லொயோலா கல்லூரி ஆகியவை இணைந்து ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றது. ஊடக துறையில் கால்பதிக்க எண்ணுபவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம். தொடர்ந்து 6 மாத காலம் இலவசமாக அளிக்கப்படும் இப்பயிற்சியில் திறமை வாய்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு வகுப்பை நடத்துகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
பட்டபடிப்பை முடித்தவர்கள் இப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு வயது வரம்பு 20 முத்த 25-க்குள் இருக்க வேண்டும். இப்படிப்பில் வாரந்தோறும் பயிற்சி பட்டறைகளும், கள ஆய்வுகளும் நடைபெறும். மேலும் இங்கு ஊடகவியல் துறைக்கு தேவையான அனைத்து திறன்களும் கற்று தரப்படும். அத்துடன் பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற ஊடகப் பிரிவுகளில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
அதிரடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஹாப்பி! இன்றைய நிலவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நவ.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி வரை தகுதியும், விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.