அதிரடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஹாப்பி! இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.40 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை:
உலக அளவில் ஆசிய நாடுகளில் தான் அதிக அளவு தங்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் தங்கத்தின் இறக்குமதி அதிகம். இந்த நிலையில் ஏற்பட்ட கொரோனா பேரிடர் உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவற்றின் விளைவாக தங்கத்தின் விலை திடீரென உச்சம் தொட்டது. இதற்கு மத்தியில் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி மற்றும் வணிக வரி உயர்த்தப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனால் தங்கத்தின் விலை சாமானியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கடந்த 1 மாதங்களாக உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் ஆபரண தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. தற்போது ஒரு சவரன் 40,000 ஐ தொடும் நிலைக்கு வந்து விட்டது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மற்றும் பெண்களை கவலைக்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு அரசு வேலை – முதல்வர் உறுதி!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.39,360க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து 4,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.66.50ஆகவும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 சரிந்து ரூ.66,500 ஆக விற்பனையாகி வருகிறது.