தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இலவச பாட புத்தகங்கள் தரம் பிரிக்கும் பணி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இலவச பாடபுத்தகங்கள் தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இலவச பாட புத்தகங்கள்:
தமிழக பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், முதலில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது. அதன் பின் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 12 ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. பள்ளிகள் திறப்பிற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசின் இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15ல் வெளியீடு? வெளியான தகவல்!
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் ஸ்வாட்ஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேளானூரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அரசின் இலவச பாட புத்தகங்கள் கடந்த 5 நாட்களுக்கு மேலாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பள்ளிகளுக்கு இன்னும் சில நாட்களில் புத்தகங்கள் அனுப்பும் பணி முடிந்துவிடும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய மாவட்டத்தின் பல பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இலவச பாட புத்தகங்களை பாட வாரியாக தரம் பிரித்து அதனை சரி பார்த்து அடுக்கி வைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் அரசின் இலவச பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது