அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழகத்தில் வெடித்த பஸ் ஊழியர்களின் போராட்டம்!
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து பல மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசின் அதிகமான வருவாய் ஈட்டும் துறையான போக்குவரத்து துறையில் ஏகப்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு பயனுள்ள துறைகளில் ஒன்றான போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு மற்ற அரசு துறை ஊழியர்களை போல எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என பல மாதங்களாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க இருக்கும் நிலையில் அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகம் – பள்ளிக்கல்வித்துறையில் முக்கிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
அதனால் மற்ற அரசுத் துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது போல அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். மேலும் சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை சிஐடியூ தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.