தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தொலைதூர கல்வியில் PG பட்டம் பெற்றால் பதவி உயர்வு இல்லை!
தமிழக அரசு சார்பில் செயல்படும் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் தொலைதூர கல்வி மூலமாக முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு:
தமிழ்நாடு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மக்களின் நலனுக்காக பல்வேறு அரசுத்துறைகள் 1670ம் ஆண்டிலிருந்து நிறுவப்பட்டு வருகின்றன. இத்துறைகளின் தலைவராக மாநில முதலமைச்சரும், ஆலோசனை மற்றும் ஒழுங்குபடுத்த தலைமை செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அரசு பொதுத்துறை நிறுவனமாக கொண்டு 1670 இல் புதிய செயலகம் உருவாக்கப்பட்டது. அரசின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் இந்த துறைகளை கவனிக்க செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் TRB தேர்வுகள் – செப்டம்பர் & நவம்பர் மாதங்களில் துவங்கும் என அறிவிப்பு!
இந்நிலையில் தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் 2ம் நிலை சார்பதிவாளர் பதவி வகித்த செந்தில்குமாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதிகள் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்க முடியாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்தால் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற தகுதியில்லை எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.