மாணவர் சேர்க்கை விவரங்களை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் !! – அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை!!!

0
மாணவர் சேர்க்கை விவரங்களை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
மாணவர் சேர்க்கை விவரங்களை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

மாணவர் சேர்க்கை விவரங்களை 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் !! – அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை!!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை விவரத்தை வருகிற 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2019-20ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை அளிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் 2020-21ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரையில் வருகிற 30ம் தேதி வரை சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து பணிகளும் தாமதமாகவே தொடங்கப்பட்டதால் செப்டம்பர் மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமென கடந்த மாதம் அமைச்சர் அறிவித்திருந்தார். இதனால் இந்த ஆண்டு விவரங்களை தொகுத்து வழங்குவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த அனைத்து விவரங்களையும் தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!