தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் குழந்தை திருமணம் குறித்து அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் விழிப்புணர்வு வழங்க தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தை திருமண விழிப்புணர்வு:
நாடு முழுவதும் குழந்தை திருமணம் தற்போது பெருமளவில் தடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இன்னும் சில பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காக குழந்தை திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை நடைமுறையில் பின்பற்றி வருகின்றனர். ஏனெனில் குழந்தை திருமணத்தால் வரும் பின்விளைவுகள் குறித்து அறியாமையே இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அதனால் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக அரசு தொடர்ந்து பெண்களின் திருமண வயதை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!
அந்த வகையில் ஏற்கனவே இருந்த பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக தற்போது உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய உத்தரவு பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை தடுக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2015 முதல் 2020 வரை சுமார் 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவிகளுக்கு அளிக்குமாறு தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக அரசின் மீன்வளத்துறையில் 600 சாகர் மித்ரா காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கண்காணிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏதேனும் நிகழ்வு நடைபெற்றால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் சட்டத்தை மீறி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.