தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 198 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 198 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த 63 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவலின் ஆதிக்கம் சற்று தலை தூக்கி வருகிறது. அந்த வகையில், நீண்ட மாதங்களுக்குப் பிறகு தினசரி 3 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், பொது மக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 198 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
குரூப் 4 தேர்வு | பயிற்சி மையங்களின் முறைகேடுகள் – நெறி செய்யப்படுமா?
இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92 ஆண்கள் மற்றும் 106 பெண்கள் உட்பட 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த 63 பேர், செங்கல்பட்டை சேர்ந்த 25 பேர், கோவையை சேர்ந்த 16 பேர், சேலத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 198 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.