குரூப் 4 தேர்வு | பயிற்சி மையங்களின் முறைகேடுகள் – நெறி செய்யப்படுமா?
தமிழகத்தில் நடந்து முடிந்த TNPSC குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில், பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
பயிற்சி மையங்கள்:
தமிழகத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் கடந்த மார்ச் 24ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வெளியான உடன் சர்ச்சை ஒன்றும் பற்றிக் கொண்டது. குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் பயின்ற தேர்வர்கள் அதிக அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தது.
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் வெளுத்து வாங்கும் மழை? வானிலை மையம் தகவல்!
இதனால் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மீண்டும் இந்த தேர்வினை முறையாக நடத்திட வேண்டும் என்றும், பல கருத்துக்கள் எழுந்தது. இது தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் அவர்கள், TNPSC போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் தங்கள் புகழுக்காக போலி விளம்பரங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற பயிற்சி மையங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இவர்களின் சுய லாபத்திற்காக அரசுப்பணியாளர் தேர்வாணையம் பலிகடா ஆக்கப்படுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download