கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி – உயர்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களை கல்லூரிக்கு நேரில் அழைக்க கூடாது என தமிழக உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்லூரிகள் திறப்பு !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பொழுதும் கல்லூரிகள் திறப்பிற்கு சாத்தியமில்லா சூழ்நிலையே நிலவி வந்தது.
TN Police “FB Group” Join Now
இந்நிலையில் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி கடந்த டிசம்பர் 02ம் தேதி முதல் முதுகலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 07ம் தேதி முதல் அனைத்து பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை எச்சரிக்கை !
அரசால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி அதன்படி நடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் சில கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை நேரடியாக கல்லூரிகளுக்கு வரவேண்டுமென அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதறகு அரசு தரப்பில், அரசு முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளை திறக்க அனுமதித்து உள்ளதாகவும் பிற ஆண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டுமென நிர்பந்திக்க கூடாது என உயர் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Clg open pannathinga
Sir enga clg la pg 1 st year vara sollirukanga sir pls take action my clg sir