தமிழகத்தில் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சாதனை ஊக்கத்தொகை:
தமிழகத்தில் அனைத்து இடங்களில் போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழங்கி வருகிறது. அத்துடன் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பேருந்து சேவையை செய்து வருகின்றனர். இதுவரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கத்தில் சுமார் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 161 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜனவரி 31 வரை இரவு ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
அத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. தற்போது போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு உள்ளிட்டவற்றில் பணிபுரிவர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை – 7வது ஊதியக் குழு பரிந்துரை!
மேலும் 2021ம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 151 நாட்கள் வரையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதையடுத்த 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாயும் வழங்கப்படுகிறது. அத்துடன் 200 நாட்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட நாட்கள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகையை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாதனை ஊக்கத்தொகையாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 7 கோடி 1 லட்ச ரூபாய் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.