மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை – 7வது ஊதியக் குழு பரிந்துரை!

0
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை - 7வது ஊதியக் குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை - 7வது ஊதியக் குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை – 7வது ஊதியக் குழு பரிந்துரை!

மத்திய அரசு ஊழியர்கள் 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் விரைவில் அவர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

DA நிலுவை தொகை:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஜனவரி முதல் DA மற்றும் DR உயர்வானது கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மூன்று தவணைகளுக்குமான DA உயர்வு தொகை ஜூலை 1ம் தேதி முதல் 28% ஆக அமலுக்கு வந்தது. அதன் பிறகு 2021 ஜூலை 1 முதலான தவணைக்கு கூடுதலாக 3% வழங்கப்பட்டு மொத்தம் 31% அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் அமலுக்கு வந்து விட்ட நிலையிலும், இன்னும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

மத்திய அரசு ஊழியர்களின் DA நிலுவை விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி இது தொடர்பான கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகளாக நிலுவைத் தொகைக்காக காத்திருக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், கோவிட்-19 காரணமாக, அகவிலைப்படியை (டிஏ) 30 ஜூன் 2021 வரை உயர்த்துவதை நிதி அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இறுதியாக ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரை, DA விகிதம் 17 சதவீதமாக இருந்தது.

திருப்பதி தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – திருமலை பாதை சீரமைப்பு!

கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் (ஜேசிஎம்) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா அவர்கள், DA உயர்வு குறித்து அறிவிக்கப்பட உள்ள நிலையில், 18 மாத DA நிலுவை தொகை முழுவதும் ஒரே செட்டில்மென்டில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் மத்திய அரசிடம் வைத்துள்ளது. JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ராவின் அறிக்கையின் படி முதல் நிலை ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை உள்ளது. அதேசமயம் 13ம் நிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1,23,100 முதல் ரூ. 2,15,900 அல்லது நிலை-14 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ. 1,44,200. 2,18,200 கைகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!