தமிழகத்தில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி – மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தில் கோவை மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஆன்லைன் வழியாக முட்டை மற்றும் கோழி இறைச்சிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இறைச்சி விற்பனை:
கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி தளர்வில்லா பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த ஒரு வாரத்தில், அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசின் அறிவிப்பின் படி பொது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிவிரைவு ரயில் சேவை இன்று முதல் துவக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்த நிலையில் கோவை மாநகரில் ஆன்லைன் வழியாக இறைச்சி விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குமரவேல் பாண்டியன் அவர்கள் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கோவை மாநகரில் பின்பற்றப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறி விற்பனைகள் நடந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை மற்றும் அரசு மீன்வள கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மை செயலர் அவர்களின் கடிதத்தின் படி, கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் வழியாக விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று இந்த பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என கூறப்பட்டிருந்தது.
Enna da headline vekkiringe