தமிழகத்தில் அதிவிரைவு ரயில் சேவை இன்று முதல் துவக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் விருத்தாசலம்-சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி வழியாக தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விருத்தாசலம் – சேலம் விரைவு ரயில்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் அவர்கள் மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். இதன் காரணமாக மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். வணிக நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகின்றன. ஊரடங்கை அறிவித்த போதிலும் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதால், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் – அரசு உத்தரவு!!
மேலும் இ – பதிவு போன்ற கட்டுப்பாடுகளால் பயணிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் கொரோனா பரவலுக்கு முன் இயக்கப்பட்டு வந்த விருத்தாசலம்-சேலம் அதிவிரைவு ரயில் சேவையை இன்று முதல் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், ஆத்தூர், வாழப்பாடி வழியாக தினசரி இயக்கப்படும் என அறிவித்துள்ளது. விருத்தாசலம்-சேலம் செல்லும் அதிவிரைவு ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு 7:30 மணிக்கு வந்தது. இந்த ரயில் சேவை இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே முன்னறிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ரயிலில் அரசு பணியாளர்கள் தவிர வேறு பயணிகள் பயணம் செய்யவில்லை. அதனால் ரயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டது.