தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடந்து வரும் நிலையில் தற்போது மேலும், 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த நிலையில் திமுக தலைமையிலான புதிய அரசு தமிழகத்தில் மே மாதம் பொறுப்பேற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து பல துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக இடஒதுக்கீட்டில் பணிக்காக மதமாற்றம் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
கடந்த மாதம் முதல் முக்கிய அரசு துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதல்கட்டமாக உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வணிக வரித்துறை, சுற்றுச் சூழல் துறை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற துறைகளின் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதாக அரசு ஆணை வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
இதன் பின்னர், 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைச் செயலராக சந்திரசேகர் சகாமுரி அவர்களும், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலராக அமிர்தஜோதி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Hello sir Or mam i have finished Msc. M. Phil. B. Ed. Microbiology if u have any vaccines or any other department please call me 🙏