தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!
சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் கட்டாய தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கட்டாய தடுப்பூசி:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
தவிர 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மே 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!
சென்னையில் 3000 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என 6,300 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை போன்ற மாநகரங்களில் செயல்படும் பேருந்துகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் சூழல் ஈடுபட்டு வருவதால் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.