காய்கறி, மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!

0
காய்கறி, மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!!
காய்கறி, மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!!
காய்கறி, மளிகை கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக காய்கறி மற்றும் மளிகை கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கொரோனா பரவல் இரண்டாம் அலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நாளொன்றுக்கு 60,000 வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு மே 1 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மஹாராஷ்டிரா அரசு இன்று (20-04-2021) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் – நாளை முதல் இயக்கம்!!

அதன்படி காய்கறி, பழங்கள், மளிகை, பால் பொருட்கள், பேக்கரிகள் போன்ற அனைத்து வகையான உணவு கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே மாதம் 1 ஆம் தேதி காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!