கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஒரே நாள் அவகாசம் – மாணவர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது கடந்த ஜூலை மாதம் 16 வெளியானது. இதனால் மேற்கொண்டு உயர்கல்வியில் சேர மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்து உள்ளனர்.
இதனால் தற்போது மாணவர்கள் பதிவு செய்வதனை தொடங்கி உள்ளதால் கல்வித்துறை மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக ஜூலை 20 முதல் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தீவிரமாக விண்ணப்பித்து வருகினறனர்.
ஆனால் தமிழகத்தில் கடைசி தேர்வினை எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 30 ஆம் நாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாறு வெளியானாலும் 31 ஆம் தேதியோடு பதிவுகள் முடிவடைவதனால் ஒரே நாளில் அவர்கள் பதிவு செய்தாக வேண்டும்.
கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி குறைவாக இருப்பதனால் அவர்களுக்கு மேலும் சிரமம் ஏற்படும். எனவே பதிவு செய்வதற்கு நும் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |