ரூ.30,000/- ஊதியத்தில் திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!!
பாதுகாப்பு அதிகாரி பணிக்கு என திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- பாதுகாப்பு அதிகாரி பணிக்கு என திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.
- Security Officer பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Sociology/ Social Work/ Psychology ஆகியவற்றில் MA முடித்திருக்க வேண்டும். Security Officer பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- ஊதியமாக வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலக விண்ணப்பிக்கும் முறை:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். நாளை (18.01.2023) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்