திருச்சி NIT இல் வேலைவாய்ப்பு – மாதம் ரூ. 31,100 சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சிக்கு பணிக்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் துறையினர் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் அண்மையில் அரசு துறைகளுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை.
ஜனவரி 26 வரை பள்ளிகள் முழுமையாக மூடல் – மாநில அரசு உத்தரவு!
அதன் பிறகு தொற்று பரவல் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்ததது. இந்த நிலையில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சி பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை – மீறினால் ரூ.1000 அபராதம்!
Junior Research Fellow (JRF) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேதியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று GATE அல்லது NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையோர் www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஜனவரி 18ம் தேதிக்குள் அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.