ஜனவரி 26 வரை பள்ளிகள் முழுமையாக மூடல் – மாநில அரசு உத்தரவு!
ஹரியானா மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் முழுமையாக மூடப்படும் என்றும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பட்டியலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
மாநிலம் முழுவதும் பெருகி கொண்டிருக்கும் கொரோனா புதிய வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஹரியானா மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர அம்மாநிலத்தில் மால்கள், சந்தைகள், பால் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மட்டும் முழுமையாக இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் ஆகியவை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – சூப்பர் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
இந்நிலையில் ஊரடங்கின் அடுத்த கட்டமாக ஹரியானா அரசு ஜனவரி 26 வரை பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளது. அதாவது இம்மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் கீழ், ஜனவரி 26 வரை பள்ளிகள் மூடப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. என்றாலும் 50 சதவீத ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை – மீறினால் ரூ.1000 அபராதம்!
அந்த வகையில் தலைமைத் தலைவர் தயாரித்த பட்டியலின் அடிப்படையில் ஜனவரி 12 முதல் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 50 சதவீத திறனுடன் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அசாம் மாநிலத்தில் நேற்று (ஜன.11) ஒரு நாளில் 5,746 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக அம்பாலா, சிர்சா மற்றும் யமுனாநகர் போன்ற மாவட்டங்களில் தலா ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.