தமிழக பள்ளிகளுக்கான கால அட்டவணை வெளியீடு – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள் – 2021 என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா முழுமையாக குறையாத நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கு பின் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
SBI வங்கி வீட்டுக்கடன் செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி – நாளையுடன் முடிவு!
வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் மூன்று வாரங்களுக்கு அடிப்படை இணைப்பு பயிற்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள்-2021 என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
கால அட்டவணை:
- 01.09.2021 – தூய்மை உறுதிமொழி தினம்
- 02.09.2021 – தூய்மை விழிப்புணர்வு தினம்
- 03.09.2021 – சமூக விழிப்புணர்வு தினம்
- 04.09.2021, 05.09.2021 – பசுமைப் பள்ளி இயக்க நாட்கள்
- 06.09.2021, 07.09.2021 – தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்
- 08.09.2021– கை கழுவுதல் தினம்
- 09.09.2021, 10.09.2021 – தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்
- 11.09.2021, 12.09.2021– தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்
- 15.09.2021 – பரிசுகள் வழங்குதல்