திருவள்ளூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு மெகா வாய்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா வாய்ப்பினை பயன்படுத்தி 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். எனவே தகுதியான பட்டதாரிகள் முகாமில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு !
நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை என்பது பல காலமாக இருந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் இதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி வருகிறது.
படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் :
இவற்றினை கட்டுப்படுத்த அவ்வப்போது தனியார் நிறுவன குழுமங்கள் ஒரு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. இவற்றில் பங்கு கொள்வதன் மூலம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
- காலியிடங்கள் – பல்வேறு நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளது
- கல்வித்தகுதி – 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் கலந்துக் கொள்ளலாம்
- முகாம் நடைபெறும் நாள் – 11.01.2021
- முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை
- முகாம் நடைபெறும் இடம் – ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை-திருவள்ளூர் உயர் சாலை, திருநின்ரவூர், திருவள்ளூர் -602024.
- தொலைபேசி – 9865234765, 8248392780
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Success