தமிழக அரசு பேருந்துகளில் திருக்குறள் உரை – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் திருக்குறள் உரையுடன் கூடிய பலகைகள் அமைக்கும் பணிகள் 10 நாட்களுக்குள் முடிவடையும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
திருக்குறள் உரை:
தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் அரசு பேருந்துகளில் திருக்குறள் உரை இடம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி ஒவ்வொரு அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் கூடிய திருக்குறள் இடம் பெற்றிருக்கும். தற்போது தமிழக முதல்வர் போக்குவரத்து கழக பேருந்துகளில் திருவள்ளுவர் படம், திருக்குறள், மற்றும் அந்த குறளுக்கான விளக்கவுரையும் பயணிகள் பார்வையில் எளிதில் தென்படும் வகையில் இடம் பெற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதையடுத்து தமிழகத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் 1400 பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகிறது எனவும், மாநிலம் முழுவதும் மொத்தமாக 7291 சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டவுடன் அனைத்து பேருந்துகளும் மக்களின் தேவைக்காக இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருக்குறள், விளக்க உரையுடன் அமைக்கும் பலகைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவை 10 நாட்களுக்குள் முடிவடையும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார் . இதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது எனவும், அதன் பிறகு புதுப்பொலிவுடன் அரசு பேருந்துகளில் திருக்குறளும் அதற்கான விளக்க உரையும் இடம் பெறும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.