தேனி பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020 !
ஓடைப்பட்டி, தேனி பேரூராட்சியில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம், கல்வி தகுதி ஆகியவற்றை பதிவு அஞ்சல் மூலம் 15.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தேனி பேரூராட்சி |
பணிகள் | தூய்மை பணியாளர் |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.07.2020 |
காலிப்பணியிடங்கள்:
தேனி ஓடைப்பட்டி, பேரூராட்சியில் தூய்மை பணியாளர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்கள் ஆகியவற்றை பதிவு அஞ்சல் மூலம் 15.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.