தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கல்? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட திரையரங்கங்களை மீண்டும் திறக்க பரிந்துரை செய்யுமாறு, திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரையரங்குகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10ம் தேதி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வுவை சுகாதாரத்துறை பணியாளர்கள் மக்களுக்கு அளித்து வந்தனர். பொது பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டது.
Flipkart நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு – சேவைகள் விரிவாக்கம்!
தொடர் முயற்சியின் பலனாக தொற்று பரவல் எதிர்பார்த்த அளவு குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி முதல் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு புறம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதனால் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 110 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறக்க பரிந்துரை செய்யுமாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது திரையரங்குகளில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.