நாளை (பிப்.6) மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

0
நாளை (பிப்.6) மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!
நாளை (பிப்.6) மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் - மாநில அரசு உத்தரவு!
நாளை (பிப்.6) மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

மாநிலத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாளை பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மாநில அரசு உத்தரவு:

கேரளாவில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவல் மூன்றாம் அலை என்றும், டெல்டாவை போல வேகமாக பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் ஒரு நாளைக்கு 18,000க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரே நாளில் 55,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் கேரள அரசு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய வைரஸ் பரவலை தடுக்க அம்மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. கேரளாவில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் புதிய உத்தரவு!

அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு நாளை பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் நாளை மருத்துவமனைகள் செயலில் இருக்கும் என்றும் மருந்தகங்கள், ஹோட்டல் பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாளை கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!