இந்திய ஐடி துறை ஊழியர்களுக்கு நேர்ந்த அவல நிலை – கேள்விக்குறியாகும் பணி வாய்ப்பு!
இந்தியாவில் தற்போது ஐடி துறை ஊழியர்கள் என்றாலே மிகவும் நல்ல சம்பளம், நல்ல பணி, குறைவான பணி நேரம், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை என்று மிகவும் நல்ல பிம்பம் இருந்து வருகிறது. ஆனால், தற்போது இந்த பணியில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால் ஐடி துறை ஊழியர்களின் நிலை மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஐடி துறை:
இந்திய ஐடி துறையானது கொரோனா காலத்தில் மிகவும் நல்ல எழுச்சியை அடைந்தது. ஊரடங்கு அறிவிப்பால் மற்ற அனைத்து துறைகளும் முடங்கிவிட்டிருந்த நிலையில், ஐடி துறையின் சேவைக்கான தேவைகள் அதிகரிக்க தொடங்கியது. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியை தொடர்ந்து செய்து வந்ததால் எந்த வித தடங்கலும் இல்லாமல் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இதனால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் வளர்ச்சியை அடைந்தது.
மேலும், நிறுவனங்களின் திறனை அதிகரிப்பதற்காக படித்து முடித்த புதிய பட்டதாரிகள் மற்றும் அதிக அனுபவமுள்ள பலரையும் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நியமனம் செய்தது. ஆனால், தற்போதைய நிலையில் சர்வதேச அளவில் இந்திய ஐடி நிறுவனங்கள் பொருளாதர மந்த நிலையை சந்தித்து வருகிறது.
விமான பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – நிறுவனம் வழங்கும் புதிய சேவை! அக்.15 முதல் முன்பதிவு!
Exams Daily Mobile App Download
இதனால் நிறுவனத்தின் செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் புதிதாக பணி நியமனம் அளித்தவர்களை ரத்து செய்துள்ளது. இந்த வரிசையில் அக்சென்சர் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. மேலும், புதிய ஊழியர்களை நியமிப்பதை தற்போது அனைத்து நிறுவனங்களும் நிறுத்தியுள்ளது. இதனால் சிலர் பணி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐடி நிறுவன ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்