விமான பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – நிறுவனம் வழங்கும் புதிய சேவை! அக்.15 முதல் முன்பதிவு!
விமான நிறுவனங்கள் பயணிகளை கவரும் வகையில் அவ்வப்போது புதிய மாற்றங்களை செய்து வருகிறது. அத்துடன் மகிழ்ச்சியான பயணத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆகாசா ஏர் விமான நிறுவனம் புதிய சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆகாசா ஏர் :
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விமான சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து துறை கடும் சரிவை சந்தித்தது. அதன் பிறகு சில கட்டுப்பாடுகளின் படி முதல் கட்டமாக உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. பிறகு படிப்படியாக அனுமதி அளிக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டது.
தற்போது உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் விமான போக்குவரத்து வழக்கம் போல இயக்கி வருகிறது. கடந்த மே மாத நிலவரப்படி இந்திய விமான நிலையங்களில் பயணிகள் வருகை 93 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் விமான நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானம் தனது உள் நாட்டு பயணிகளுக்காக புதிய மனுவை கடந்த 3 ஆம் தேதி வெளியிட்டது.
தமிழகத்தில் ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு.. அதிகரித்த நடைமேடை கட்டணம் – வலுக்கும் எதிர்ப்பு!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் நிறுவனம் பயணிகளுக்கு நட்பு சேவையை அளிக்கும் நோக்கில் விமானத்தின் கேபின் மற்றும் சரக்கு பெட்டிகளில் செல்லப்பிராணிகளுடன் (நாய், பூனை) பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று விமானத்தின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் முதல் செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்