மீண்டும் தொடங்கியது கொரோனாவின் அடுத்த அலை? புதிய கட்டுப்பாடுகள் அமல்!
சீனாவில் செங்குடு நகரில் கொரோனாவின் புதிய அலை தொடங்கியுள்ளதால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பரவல் சீன நாட்டில் இருந்து தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக சீன மக்கள் பிற நாடுகளுக்கு செல்லவும், மற்ற நாட்டு மக்கள் சீனாவுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா நோய் உலகம் முழுவதும் தீவிரமாக பரவ தொடங்கியது. இந்த நிலையில் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு நடவடிக்கை பின்பற்றப்பட்டது.
இதன் பிறகு ஒரு வருட காலமாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணற ஆரம்பித்தன. இதில் இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு சோதனை மூலம் மனிதர்களுக்கு செலுத்தி வெற்றி அடைந்த பின் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இந்த நிலையில் சீனாவில் செங்குடு எனும் பகுதியில் கொரோனாவில் அலை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து அந்த நகரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக முந்தைய 24 மணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சோதனை ரிசல்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், அவர்கள் மூலமே மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படும் என்று உள்ளூர் சுகாதார நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் செங்டு நகரத்தில் புதிதாக 157 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வெளியே வராமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்