ஆகஸ்ட் 10 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சில கூடுதல் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க, ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும்.
சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
இந்த ஊரடங்கு உத்தரவின் போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உத்தரகண்டில் கடந்த 37 மணி நேரத்தில், 22 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதனிடையே தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதி ஊர்வலங்களில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உத்தரகண்ட் அரசு நேற்று (ஆகஸ்ட் 2) முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் ஷிப்ட் முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதால், கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கையாள வேண்டும் என உத்தரகண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே அறிவுறுத்தியுள்ளார்.