சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு - இன்றைய
சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
சமையல் போட்டியில் தோல்வி அடையும் சந்தியா, சிறப்பு பரிசு – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இன்று மாபெரும் சமையல் போட்டியில் சந்தியா கலந்து கொள்கிறார். அதில் முதல் பரிசு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டாலும், சந்தியா மற்றும் சரவணனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி” சீரியலில் சந்தியா மாபெரும் சமையல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். சந்தியா மிகுந்த பதட்டத்தில் இருக்க சரவணன் ஆறுதலாக பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து ஆதரவாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிவகாமியும் அவரது கணவரும் கூட வந்து உற்சாகப்படுத்துகின்றனர். போட்டியின் தொடக்கத்தில் இந்த போட்டியில் ஜெய்பவர்களுக்கு முதல்பரிசு மட்டுமில்லாமல் சிறப்பு பரிசு ஒன்று காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி – இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!

சந்தியா சரவணன் சொல்லும் டிப்ஸ் படி ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கிறார். சரவணன் ஆதரவாக இருக்க, நடுவர்கள் சாப்பாட்டை சுவைத்து பார்க்க வருகின்றனர். அப்போது சந்தியா சமைத்த சாப்பாடை சாப்பிட்டு ஒன்று நன்றாக இருப்பதாக கூறினார்கள். அடுத்த முறை வரும் போது சந்தியா செய்த குலாப் ஜாமுன் நன்றாக இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் சந்தியா மிகுந்த வேதனை அடைகிறார்.

ஜெனியை அவரது வீட்டில் விடும் செழியன், தனியாக தூங்க முடியாமல் தவிக்கிறார் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

போட்டியின் இறுதியில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல் பரிசு குறித்த விவரங்களை நடுவர்கள் சொல்கின்றனர். முதல் பரிசை ஜெயந்தி என்பவர் பெறுகிறார். இதனால் சந்தியாவும் சரவணனும் வருத்தமடைகின்றனர். பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்ப சிறப்பு பரிசு குறித்த தெரிவிக்கின்றனர். அப்போது சந்தியா சரவணன் பெயரை அழைத்து அந்த பரிசை வழங்குகின்றனர். சந்தியா சமைக்கும் போது சரவணன் மிகுந்த ஆதரவுடன் இருந்த காரணத்தால் இந்த பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இதை வாங்கி சந்தோசப்படும் சந்தியா, சரவணன் அவங்க தெரியாமல் கொடுத்துவிட்டார்கள் நீங்க எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்ல சந்தியா வருத்தமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!