தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்டோபர் 11) தொடர் மின்தடை – முழு விபரம் உள்ளே!
மாதத்தின் ஒருநாளாவது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும். அந்த நாளில் தமிழகத்தில் துணைமின் நிலையங்களில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்படும். வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட போகிறது என இந்த பதிவில் காணலாம்.
மின்தடை:
மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் எப்படி இன்றியமையாத ஒன்றோ அது போல தற்போது மின்சாரமும் முக்கியமானதாக மாறிவிட்டது. மேலும் அரசும் மக்களுக்கு தடை இன்றி மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மின்சாரத்துறையும் ஒவ்வொரு மாதமும் எந்த வித பழுதுகளும் துணை மின் நிலையத்தில் ஏற்படாத வண்ணம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட துணைமின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்நிலையில் நாளை மறுநாள் (அக்டோபர் 11) ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருக்கிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வரிடம் கோரிக்கை!
Exams Daily Mobile App Download
அதாவது இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, ஆற்றாங்கரை, வாணியங்குளம், அழகன்குளம், தேர்போகி, வாலாந்தரவை, குயவன்குடி, உச்சிப்புளி, பெருங்குளம், நாகாச்சி, ரெட்டையூரணி, புதுமடம், சாத்தக்கோன்வலசை, பனைக்குளம், தாமரைக்குளம்,வழுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 11 ஆம் தேதி மின் தடை செய்யப்படும். இந்த அறிவிப்பு அம்மாவட்ட உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்