பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – காணொளி வாயிலாக ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி அவர்கள் அவ்வப்போது காணொளி மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார். நோய் தடுப்பு பணிகள் பற்றி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகிறார். நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – IFSC கோடுகள் மாற்றம்!
இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிரதமர் இல்லத்தில் மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய துறைகள் பற்றிய செயல்பாடுகள் விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து (30.06.2021) இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் நடைபெறவுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கல் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
இந்த கூட்டத்தில் நாட்டின் கொரோனா நிலை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பிரதமர் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.