கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கல் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையாக உருவெடுத்து மக்களை தாக்க தொடங்கியது. பின் அரசின் கடுமையான நடவடிக்கை காரணமாக 2020 இறுதியில் தொற்று தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் மக்கள் அதிர்ச்சி அடையும் வகையில் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து நாட்டில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்று மிக தீவிரமாக மக்களை தாக்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் கடந்த ஆண்டை விட தற்போது நாட்டில் உயிர் சேதம் விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தற்போது நாட்டில் பலர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதால் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறது. இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அரசு தரப்பில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.
9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – அரசாணை வெளியீடு!
இதையடுத்து ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம். அதற்கான கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. எனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரத்தில் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.