தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தொழில்துறை நிறுவனங்களில் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனங்கள் தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்தி வருகிறது.
தற்காலிக பணியாளர்கள்
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல தொழில்துறை நிறுவனங்கள் மூடப்பட்டதால், வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து நிறுவனங்கள் மீண்டுமாக செயல்பட துவங்கின. அதனால் இந்திய பொருளாதாரம் சற்று உயர்ந்து வர துவங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த ஆண்டுக்கு இடையில் கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்கள் பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்தது. அப்படி வேலை நிறுத்தம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பதிலாக தற்காலிக பணியாளர்களை பணியில் சேர்க்க தற்போது ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் பல நிறுவனங்களில் தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அப்படி பணியில் அமர்த்தப்படும் தற்காலிக பணியாளர்களின் வேலை பளுவும் அதிகமாக இருப்பதாக சந்தை நிலவரம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – ரயில்வே துறை அறிவிப்பு!!
அதே போல அந்த பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட பணியை செய்து முடிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள் என தெரிய வந்துள்ளது. தற்காலிக பணியாளர்கள் சேர்க்கை குறித்து டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் தேவல் சிங் கூறுகையில், இந்தியாவில் தற்காலிக ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு இரட்டிப்பு வளர்ச்சி அடையும் என எதிர்பார்புகள் நிலவி வருகிறது என தெரிவித்துள்ளார்.