முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – ரயில்வே துறை அறிவிப்பு!!

0
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - ரயில்வே துறை அறிவிப்பு!!
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - ரயில்வே துறை அறிவிப்பு!!
முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் – ரயில்வே துறை அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

500 ரூபாய் அபராதம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 2.34 லட்சம் பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கொரோனாவை தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தும் எண்ணம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதுபோல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது. தமிழக அரசும் பொது இடங்களில் கூடும் மக்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. அப்படி முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் 25% குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!

தற்போது முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!