செப்.1 முதல் பள்ளிகள் திறப்பிற்கு ஒரு வாரம் இடைக்கால தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நாளை முதல் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகள் மாநில அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அந்த வரிசையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த மாட்டார்கள் – அரசு உறுதி!!
அதன் படி நாளை ( செப்டம்பர் 1) முதல் தெலுங்கானாவில் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், தெலுங்கானாவில் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளிகளை திறக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்தால் மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தற்போது தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்ட மாநிலமாக தெலுங்கானா மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் நாளை 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.