தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த மாட்டார்கள் – அரசு உறுதி!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் நாளை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தமாட்டார்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு உறுதி அளித்துள்ளது.
தமிழக அரசு உறுதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் எதிர்காலம் காரணமாக ஆன்லைன் மூலமாக ஏற்பாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் காரணமாக பெற்றோர்களின் கருத்து கேட்பு மற்றும் மருத்துவ குழுவினர் ஆலோசனைபடி பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை (செப்.1) முதல் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தப்படாமல் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளை கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இருந்த போதிலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒவ்வொரு வகுப்புகளிலும் 50%க்கும் குறைவான மாணவர்களையே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்துக் கொள்ள மாணவர்களை அனுப்பலாம். மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என தமிழக அரசு தரப்பில் இருந்து உறுதியாக கூறப்பட்டுள்ளது.