விஜய் டிவியில் அக்.4 முதல் பிரபல சீரியல்களின் நேரம் மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேர மாற்றம்:
விஜய் தொலைக்காட்சியில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விஜய் டிவி சீரியல்கள் TRPயில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் மிகவும் பிரம்மாண்டமான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் ஒரே வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள்.
கண்ணன், ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொண்ட மூர்த்தி, மகிழ்ச்சியில் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!
இந்த ஆண்டின் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் நிகழ்ச்சி குறித்த நான்கு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளது. மேலும் போட்டியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரைம் நேரமான 9 மணிக்கு ஒளிபரப்பாகும். அந்த நேரத்தில் பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் போட்டியாளர்கள் – மாஸ்டர் பட நடிகர் என்ட்ரி!
அந்த சீரியல்களில் நேர மாற்றம் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அக்டோபர் 4 முதல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும், மௌன ராகம் சீரியல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து சேனல் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.