கண்ணன், ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொண்ட மூர்த்தி, மகிழ்ச்சியில் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், குலதெய்வம் கோவிலுக்கு செல்ல கண்ணனையும் அழைக்க வேண்டும் என தனம் கூற அதற்கு மூர்த்தி ஒப்புக்கொள்ள மொத்த குடும்பமும் ஆச்சரியத்தில் திகைத்துள்ள படி புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பல்வேறு சோகமான கதைக்களத்துக்கு பிற்பாடு, ஒரு வழியாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்’ தற்போது தான் வழக்கத்துக்கு மாறி இருக்கிறது. எப்போதும் கலகலப்பாக காணப்படும் இந்த சீரியல் கடந்த ஒரு வாரமாக அழுகையும், புலம்பலுமாக காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அம்மாவை இழந்த துக்கத்தை ஆற்றமுடியாமல் தவிக்கும் மூர்த்தி குடும்பத்திற்கு, தனம் தனது ஆதரவை அளிப்பதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புதிய எபிசோடுகள் இதுவரை வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் போட்டியாளர்கள் – மாஸ்டர் பட நடிகர் என்ட்ரி!
அதாவது தனத்துக்கு காட்சியளித்த லட்சுமி, தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் தான் இருப்பதாகவும், தனத்தின் குழந்தையை பார்க்காமல் செல்ல மாட்டேன் என்றும் கூறுகிறார். இந்த ஆதரவான வார்த்தைகளை கேட்டதும், அதுவரை வருத்தத்தில் இருந்து வந்த தனம் நிஜத்தை புரிந்து கொள்கிறார். பிறகு தன்னைத்தான் தேற்றி கொண்டு, மற்றவர்களுக்கும் ஆறுதல் சொல்லுகிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு வரும் முருகன், தனத்துக்கு குழந்தை பிறகும் முன்பு குல தெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என கூறுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா இறப்பில் புதிய ட்விஸ்ட் – பரிகார புகைப்படம் ரிலீஸ்!
இதையடுத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் தனம், கண்ணனையும் கோவிலுக்கு வரவழைக்கலாமா என மூர்த்தியிடம் கேட்கிறார். இதற்கு மூர்த்தி என்ன பதில் சொல்லுவார் என அனைவரும் அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சரி வரட்டும் என மூர்த்தி பதில் சொல்கிறார். இதுவரை கண்ணனை ஏற்றுக்கொள்ள மறுத்த மூர்த்தியின் இந்த பதிலால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மட்டுமல்ல, மகிழ்ச்சியில் இருப்பது அதன் ரசிகர்களும் தான்.