மே 30க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிப்பு? மாநில அரசு ஆலோசனை!!
தெலுங்கானா மாநிலத்தில் மே 12 ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் கொரோனா ஊரடங்கை மே மாதம் 30 ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா 2 ஆம் அலையானாது இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக நாடு முழுவதும் ஏற்பட்ட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை குறைந்து வந்தாலும், பலி எண்ணிக்கை மட்டும் சற்று ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. தவிர தென் மாநிலங்களில் தான் அதிகளவு புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனால் தமிழகம் உள்ளிட்ட பல தென் மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையானது விதிக்கப்பட்டு, அவை மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மே 30 ஆம் தேதிக்கு மேல் மீண்டுமாக ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 12 ஆம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 30 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெலுங்கானாவில் மே 30 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கில் வங்கி ஊழியர்களுக்கு அனுமதி – கமிஷனர் உத்தரவு!
இந்த கூட்டத்தில் முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயம், பயிர்கள் விதைப்பு, நெல் கொள்முதல், விதைகள் மற்றும் உரங்கள் கிடைப்பது, ஊரடங்கு குறித்த பல ஆலோசனைகளை அரசு மேற்கொள்ளவுள்ளது. தவிர தெலுங்கானாவில் மே 30 க்கு மேல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், மாநில அரசு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தொடருமா அல்லது சில தளர்வுகளை அனுமதிக்குமா என்பது பின்னர் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.