தமிழகத்தில் முழு ஊரடங்கில் வங்கி ஊழியர்களுக்கு அனுமதி – கமிஷனர் உத்தரவு!
தமிழகத்தில் ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் இயங்கி வருகிறது. இதனால் வங்கிகளில் பணிக்கு செல்லும் ஊழியர்களை காவல்துறையினர் வழிமறித்து தடுக்க கூடாது என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி ஊழியர்கள்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மே 10 ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் அற்ற கடும் ஊரடங்காக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மற்ற சேவைகளை தொடர்ந்து வங்கி சேவையும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் அரசு இந்த முழு ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் வங்கிகள் செயல்படும் நேரம் மட்டும் ஊரடங்கு காரணத்தால் குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பணம் அவசியமான ஒன்றாக உள்ளது. தினந்தோறும் பண பரிவர்த்தனை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்காக வங்கிகள் இயங்குவது கட்டாயம் ஆகும். போக்குவரத்து சேவை இல்லாததால் வங்கி ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் பணிக்கு வருகின்றனர். இவர்களை வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்கள் தடுத்து நிறுத்துவதாக வங்கி ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர்.
தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணியில் சேர வேண்டுமா? புதிய இணையதள பக்கம்!
இதனால் பணிக்கு வரும் வங்கி ஊழியர்களை தேவையில்லால் சாலைகளில் தடுக்க கூடாது என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதை மீறி தடுத்து நிறுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வங்கி ஊழியர்கள் தங்கள் வங்கிகளின் அடையாள அட்டை அல்லது வங்கி மேலாளரிடம் இருந்து கடிதம் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். சோதனைகளில் ஈடுபடும் காவலர்களிடம் அதை காண்பிக்க வேண்டும் வங்கி ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என கமிஷனர் தெரிவித்துள்ளார்.