தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வு வயது குறைப்பு மறுபரிசீலனை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். என தமிழ்நாடு மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் ஓய்வு வயது:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் இளைஞர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசு மீண்டும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியது. இதனால் படித்த இளைஞர்கள் அரசு பணிகளில் சேர காலதாமதம் ஆகும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
செப்., 19 முதல் மீண்டும் துவங்கும் IPL 2021 திருவிழா – ஆரம்பமே CSK Vs MI, ரசிகர்கள் கொண்டாட்டம்!
அரசு இந்த புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனை ஆராய்ந்த அரசு, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பதை குறித்து கலந்தாலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைப்பதற்கு பதிலாக மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும் எனவும் அரசின் அகவிலைப்படி உயர்வை அதிகரிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டனர். அதனை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.