கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு காச நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்ட நிலையில் அரசின் கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இப்படியாக இருந்த போதிலும் டெல்டா, ஜிகா வைரஸ் பரவல் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் டிபி எனப்படும் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால் கொரோனா நோயாளிகளுக்கு காச நோய் பரிசோதனை செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக காசநோய் பரிசோதனைகள் குறித்த தகவல்கள் பதிவு செய்வது குறைந்துள்ளது. கொரோனா மற்றும் காசநோய் இரண்டுமே நுரையீரலை தாக்கக் கூடியவை இந்த இரண்டு நோய்களுக்கும் பொதுவான அறிகுறிகள் உள்ளன. எனவே கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேலும் காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாகும். இதற்கு ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு பக்க விளைவாக கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.அது போல காசநோய் பாதிப்பும் ஏற்படுகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இல்லை. கொரோனாவால் காசநோய் அதிகரித்துள்ளதாகவும் கூற முடியாது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக கொரோனா நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனையும் காச நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.